Tuesday, July 10, 2012

ஆன்லைனில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13 தேதி கடைசி நாள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 631 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தகுதியாக இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
மேலும் விரிவான தகவல்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment