Monday, June 18, 2012

இனிமேல் நடிக்கப் போவதில்லை ஐஸ்வர்யா ராய் பேட்டி

                        இனிமேல் நடிக்கப் போவதில்லை ஐஸ்வர்யா ராய் பேட்டி





         ஒரு குழந்தைக்கு தாயானதில் பேரின்பம் அடைந்துள்ளேன், அதனால் நடிப்பை பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னர் நடிக்காமல் இருந்து வரும் ஐஸ்வர்யா சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். 

          இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு லண்டன் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து எம்.பி. அளித்த விருந்தில் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், நான் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளதை எண்ணும் போது பேரின்பம் அடைகிறேன். சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்க‌வில்லை. சொல்லப்போனால் அதைப்பற்றியே யோசிக்கவில்லை. அப்படியே மீண்டும் நடிக்க வந்தாலும் எப்படிப்பட்ட ரோலில் நடிப்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். மேலும் என்னுடைய வாழ்க்கையிலேயே அபிஷேக்கை மணந்த தினம் தான் சிறப்பான நாள் என்றார்.