Saturday, July 14, 2012

TNPSC தமிழ் இலக்கணம் - வேற்றுமைகள்

TNPSC தமிழ் இலக்கணம் - வேற்றுமைகள்

பெயர்ச் சொல்லொன்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமையாம். "மாறன் வெட்டினான்",இந்தத் தொடரில் வெட்டியவன் மாறன். "மாறனை வெட்டினான்", இந்தத் தொடரில் வெட்டுண்டவன் மாறன். இப்பொருள்
வேறுபாட்டைத் தருவது "ஐ" என்னுஞ் சொல். இஃதெ வேற்றுமை என்றழைக்கப்படும். இந்த வேற்றுமையென்பது எட்டு வகைப் படும்:-
முதல் வேற்றுமை(அ)எழுவாய் வேற்றுமை:
          "சொற்றொடரில் ஒரு பெயர்ச்சொல் பெயராக மட்டுமல்லாது மற்றொரு வினைக்கு எழுவாயாகவும் இருக்கும் போது, அஃதெ எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை எனப்படும். கீழ்வரும் உதாரணங்களில், முதலாவதாக மாறன் என்ற பெயர்ச்சொல் வெட்டினான் என்ற வினைக்கு எழுவாயாகவும் இருப்பதால் முதல் வேற்றுமை(அ) எழுவாய் வேற்றுமையென்று வழங்கப்படும். இவ்வேற்றுமை வினைமுற்று, பெயர், வினாக்களில் ஒன்றைக் கொண்டு முடியும்: -

§  (உ-ம்)
மாறன் வெட்டினான்
வெள்ளி முளைத்தது

இரண்டாம்வேற்றுமை:-
          ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவது இரண்ட்டாம் வேற்றுமை. இதன் உருபு "ஐ".: -

§  (உ-ம்)
நிலத்தை உழுதான்.(நிலம்+ஐ+உழுதான்)
மரத்தை வெட்டினான்.(மரம்+ஐ+வெட்டினான்)

மூன்றாம் வேற்றுமை:-:-
          இவ்வேற்றுமைக்கான உருபுகள்: "ஆல்", "ஆன்", "ஒடு", "ஓடு". கீழ்வரும் சொற்றொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென மூன்றாம் வேற்றுமையை விளக்குகின்றன: -

§  (உ-ம்)
கலப்பையால் உழுதான்
வாளான் அறுத்தான்
பாலொடு தேன்கலந்து
தாயோடு அறுசுவை போம்

நான்காம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமைக்குரிய உருபு "கு". சொல்லுருபு "பொருட்டு". கீழ்வரும் உதாரணங்கள் இவ்வேற்றுமையை விளக்குகின்றன.

§  (உ-ம்)
ஏழைக்கு உணவு கொடுத்தான்
கூலியின் பொருட்டு பணி செய்தான்
ஐந்தாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமைக்கான உருபுகள்: "இல்", "இன்", சொல்லுருபு: "நின்று", "இருந்து", "காட்டிலும்", "பார்க்கிலும்", "விட". கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை கவனிக்கவும்:

§  (உ-ம்)
அறிவிற் சிறந்தவர் வள்ளுவர்
புதுவையின் தெற்குக் கடலூர்
மரத்தினின்று இறங்கினான்
பணியிலிருந்து ஒய்வு பெற்றார்
விந்தியத்தைக் காட்டிலும் இமயம் உயரம்
இரும்பை விட பொன் மதிப்புடையது

ஆறாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமையின் உருபு "அது". சொல்லுருபு: "உடைய". கீழ்வரும் எடுத்துகாட்டுகள் உருபின் பயனை விளக்குகின்றன:-

§  (உ-ம்)
முருகனது வேற் படை
என்னுடைய முகம்

ஏழாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமையின் உருபு: "கண்", "இடை", "முன்", "இடம்", "மேல்", "கீழ்", "பின்", "உள்", "இல்". இவை பயனாகும் சொற்றொடர்கள் இதோ:

§  (உ-ம்)
ஊரின் கண் உள்ளது குளம்
நல்லாரிடை அறிவு சிறக்கும்
என் முன் நில்லாதே
அவனிடம் பண்பு உண்டு
சிரமேற் கொள்க
வாழையின் கீழ் கன்று
கந்தனுக்குப் பின் முருகன்
தமிழ்க் கடலுக்குள் கவிமுத்து
ஊர் நடுவில் குளம்

எட்டாம் வேற்றுமை:-
          இவ்வேற்றுமையை விளி வேற்றுமை என்பர். இதற்கு உருபு இல்லை. கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை கவனிக்க:

§  (உ-ம்)
மகன்    - மகனே!
ஈற்றில் "ஏ" மிகுந்தது.
நங்கை  - நங்காய்!
ஈற்றில் "ஐ" "ஆய்" ஆகத் திரிந்தது.
அன்பன் - அன்ப!
ஈறு கெட்டது
புலவர்  - புலவீர்!
ஈற்றயல் திரிந்தது
தம்பி    - தம்பி!
இயல்பாதல்

Wednesday, July 11, 2012

கம்ப்யூட்டரில் சில வழக்கமான Error செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும்

கம்ப்யூட்டரில் சில வழக்கமான Error செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் :



கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.


1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.


2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.


3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.


4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.


5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.


6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.


7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.


9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.


10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது: பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.


11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.


12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.


13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.


14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.


15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.


16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.


17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.


18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.


19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.


20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.


21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.


22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.


23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.


24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.


பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

Tuesday, July 10, 2012

கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்த புதிய ஏடிஎம் இயந்திரம்!

கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்த புதிய ஏடிஎம் இயந்திரம்!

ஷார்ஜாவில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கான புதிய ஏடிஎம் இயந்திரத்தை அமைத்திருக்கிறது ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி. பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் குரல் வழிகாட்டும் வசதியுடன் இந்த புதிய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பெரிய ப்ரெய்லி கீபோர்டு, உயர்ந்த
ரிசலூசன் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, தடிமனமான எழுத்துக்கள், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் போன்றவை உள்ளன. இதன் மூலம் பார்வை இல்லாதவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை மிக எளிதாக இயக்க முடியும்.
சாதாரண ஏடிஎம்களை இயக்க வேண்டும் என்றால் அந்த இயந்திரம் கேட்கும் நீண்ட வினாக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இயந்திரத்தில் அதிகமாக கேள்விகள் வராது. பார்வை அற்றவர்கள் மிக விரைவாக இதை இயக்கும் விதத்தில் இந்த ஏடிஎம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஷார்ஜாவில் உள்ள பார்வையற்றவர்களுக்கான எமிரேட்ஸ் அசோஸியேசன் தலைமையகத்தில் இந்த புதிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அங்கு இந்த புதிய ஏடிஎம் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்வை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்த்தான் பின் முகமது அல் க்வாசிமியின் கட்டளைப்படி இந்த புதிய ஏடிஎம் சர்ஜா இஸ்லாமிக் வங்கியால் நிறுவப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்.

விண்ணில் புதிதாகத் தோன்றிய புதிரான நட்சத்திரம்

விண்ணில் புதிதாகத் தோன்றிய புதிரான நட்சத்திரம்:




புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.


உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.
பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.
உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

ஆன்லைனில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 13 தேதி கடைசி நாள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 631 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தகுதியாக இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
மேலும் விரிவான தகவல்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Monday, June 18, 2012

இனிமேல் நடிக்கப் போவதில்லை ஐஸ்வர்யா ராய் பேட்டி

                        இனிமேல் நடிக்கப் போவதில்லை ஐஸ்வர்யா ராய் பேட்டி





         ஒரு குழந்தைக்கு தாயானதில் பேரின்பம் அடைந்துள்ளேன், அதனால் நடிப்பை பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னர் நடிக்காமல் இருந்து வரும் ஐஸ்வர்யா சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். 

          இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு லண்டன் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து எம்.பி. அளித்த விருந்தில் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், நான் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளதை எண்ணும் போது பேரின்பம் அடைகிறேன். சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்க‌வில்லை. சொல்லப்போனால் அதைப்பற்றியே யோசிக்கவில்லை. அப்படியே மீண்டும் நடிக்க வந்தாலும் எப்படிப்பட்ட ரோலில் நடிப்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். மேலும் என்னுடைய வாழ்க்கையிலேயே அபிஷேக்கை மணந்த தினம் தான் சிறப்பான நாள் என்றார்.